Saturday 21 July, 2007

உலகத்தின் கூரை







இன்றைக்குள்ள மாணவர்கள் முதல் அவர்களது தாத்தாக்கள் வரை, உலகத்தின் கூரை என்றால், திபெத் என்று புவியியல் பாடத்தில் படித்திருப்பார்கள். கடல் மட்டத்துக்கு மிக உயரமான இடத்தில் அமைந்திருப்பதாலேயே திபெத்துக்கு இந்தப் பெயர்.
இது மட்டுமல்ல, வட துருவம் தென் துர்வம் தவிர்த்து மூன்றாவது துருவம் என்றும் திபெத் அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடத்தில் இருப்பதால், இதன் தட்ப வெப்ப நிலை, எப்போதும் சிலு சிலுவென இருக்கும். பச்சைப் பசேலென்ற புல்வெளிகள், வானுயர நிற்கும் பனி மலைகள், ஒடையாய் உருவெடுத்து குதித்தோடி பாறையிலிருந்து கீழே விழும் நீர்விழ்ச்சிகள் என இயற்கை அண்ணையின் அழகான ஒரு அன்பளிப்பாய், கண்களுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு இதமும், உடலுக்கு புத்துணர்ச்சியும் தரும் நில அமைவை உடையது, திபெத்.
ஆனால் இன்றைக்கு சுருங்கிக்கொண்டிருக்கும் பனிமலைகள், உறைபனி நிலத்தின் உருகுதல், புல்வெளிகள் மஞ்சள் நிறமாதல், ஆறுகளின் வறட்சிமயமாக்கம் என திபெத்திலான உலக வெப்பமேறலின் பாதிப்புகளை ஆய்வு செய்வோர், பெரிதும் கவலைப்படுகின்றனர். அண்மையில் யாங்சு ஆற்றின் நதிமூலப்பகுதியிலான பனிமலைகள் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக குறைந்து வருகின்றன, சுருங்கி வருகின்றன என்கிறார் சீன அறிவியல் கழகத்தைச் சேர்ந்த லி யாஜியே. இவர் நான்சிங் புவியியல் மற்றும் நீர்நிலையியல் நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளாவார்.
சிங்காய் திபெத் இருப்புப்பாதையில் பயணிப்பவர்களுக்கு வழியில் காணப்படும் யூசு மலை உள்ளிட்ட 15 பனிச்சிகரங்களை பார்ப்பது ஒரு மகிழ்ச்சிகரமான, சிலிர்ப்பான அனுபவமாகும். ஆனால் யூசு மலையின் மேற்கே பனிமலை பள்ளத்தாக்கு பகுதிக்குள் நுழையும்போது, தற்போது 5000 மீட்டருக்கு மேல் பனிமலை இருப்பதற்கான அறிகுறியே காணமுடியவில்லை. பனி மலைக்கு பதிலாக, சிறிய ஓடைகளாக நீருற்றுகள் வழிந்தோடுவதை காணமுடிகிறது. மலையின் மறுபக்கத்தில் பனி மலையின் மிச்சம் மீதியை காணமுடிகிறதாம். ஒரு மனிமலையின் மறைதல், உருகுதல், இல்லாமல் போதலுக்கு நான்கு நிலைகள் உண்டு. இந்தக் குறிப்பிட்ட பனிமலை அதில் நான்காவது, இறுதிக்கட்டத்தில் இருக்கிறது என்பது துயரமான சேதி என்கிறார் லி யாஜியே.
சிங்காய் திபெத் பீடபூமி 36 ஆயிரம் பனி மலைகளுக்குச் சொந்தக்காரி என்று புகழ்பெற்று விளங்கியது. 50 ஆயிரம் சதுர கி மீ பரப்பளவிலான் ஐந்த 36 ஆயிரம் பனி மலைகள், சீனாவின் முக்கிய நதிகளுக்கும், தென்கிழக்காசியாவின் முக்கிட நதிகளுக்கும் ஊற்றுமூலமாய் அமைந்து, நீரை வாரி வழங்கிக்கொண்டுள்ளன. ஆனால் கடந்த 100 ஆண்டுகளில், இந்தப்பனிமலைகளின் பரப்ப் 30 விழுக்காடு குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலக வெப்பமேறலின் ஒரு தோராய மதிப்பீட்டின் படி தற்போதுள்ளதை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயர்ந்தால், இந்தப் பனிபிரதேசத்தின் பரப்பளவு பாதியாகிவிடும் என்று எச்சரிக்கை தொனிக்க கூறுகின்றனர் அறிவியலர்கள்.
உலக வெப்பமேறலின் கசப்பான, கொடுமையான முரண்களில் ஒன்று, இப்படி பனிமலைகள் வெப்பத்தால் உருகினாலும் அது நீர் தேவை மற்றும் வினியோகத்துக்கு ஆக்கப்பூர்வ பங்காற்றாது என்பதே. பனி மலைகள் உருகியோடும்போது அதிகமான நீர், வெப்பமான தட்பவெப்ப நிலையால் ஆவியாகி விடுகின்றன.
மட்டும்மல்ல வெப்ப நிலையின் அதிகரிப்பு திபெத்தின் நில அமைவில் குழப்பங்களியும் ஏற்படுத்துகிறதாம். சிங்காய் திபெத் நெடுஞ்சாலை வழியே செல்லும் பயணிகள், கடந்த சில ஆண்டுகளாக, குண்டும் குழியுமான சாலைப் பகுதிகளால் அவதியுறுகின்றனர்.
கடல் மட்டத்திலிருந்து 4700 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான உடாலிங் என்பதை உதாரணமாகக் குறிப்பிடலாம். இந்த சிறிய நகரத்தை ஒட்டிய நெடுஞ்சாலை பகுதி மிக மோசமான நிலையில் உள்ளது. அசுரபலம் கொண்ட ராட்சதர்கள், ராட்சத ஆயுதங்கள் கொண்டு தாக்கியது போல காட்சியளிக்கும் இந்த நெடுஞ்சாலை பகுதி, இயற்கையின் திருவிளையாடலால் அப்படி ஆனது என்றால் நம்பமுடிகிறதா. இயற்கையின் இந்த திருவிளையாடலின் பின்னணியில் மனிதனின் தன்னலத்தால் உருவான செயற்கைத்தனங்கள் அணி வகுத்துள்ளது வேறு கதை. புவியின் மேற்பரப்புக்கு கீழே உறைந்துள்ள பனிப்படலம் உருகுவதால், திடமான பனி திரவமாக, மேற்பரப்பில் போடப்பட்ட சாலை, குமுங்கிவிடுகிறது, ஆகவே குண்டும் குழியுமாக காட்சியளிக்கிரது.
இந்த உறைபனி உருகுதலால் கடல் மட்டத்திலிருந்து உயரமான இடத்திலுள்ள தாவர வாழ்க்கைச் சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளில் உலக வெப்பத்தாலும், நீராவியதலாலும் ஏற்பட்ட நீரின் இழப்பு இப்பகுதியிலான நீர் இருப்பை குறைத்து புல்வெளிகலை வறட்சிகாணச் செய்துள்ளது என்கிறார் சீன அறிவியல் கழகத்தின் பனி மற்றும் விளைநிலப் பிரதேச சுற்றுச்சூழல் மற்றும் பொறியியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த அறிவியலாளர் லி யுவன்ஷுவோ.
கடந்த 15 ஆன்டுகளில் கடல் மட்டத்திலிருந்து உய்ரமான இடங்களிலுள்ள 15 விழுக்காட்டு புல்வெளிகளும், கால் பன்குதி சதுப்பு நிலங்களும் காணாமல் போயுள்ளன என்கிறார் லி யுவன்ஷுவோ.
சீனா உள்ளிட்ட பல நாடுகள் உலக வெப்பமேறலை தணிவுபடுத்த, வேகம் குறைக்க முயற்சிகளிஅ மேற்கொண்டுள்ளன. ஆனால் இந்த் அபிரச்சனையின் அளவு எவ்வளவு பெரிது என்றால், அனைத்து நாடுகளும் அனைத்து மக்களுன் இந்தப்பணியில் கைகோர்த்து செயல்படவேண்டும், அப்போதுதான் பயன் கிட்டும்.

Friday 13 July, 2007

மாபெரும் விஞ்ஞானி கலிலியோ

மாபெரும் விஞ்ஞானி கலிலியோ--- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது। அரசு மரியாதை செய் கிறது। அறிவியல் உலகத் திற்கு சிறந்த பங்களிப்பு செய் யும் விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு கூடக் கிடைக்கிறது। 16-17ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் நிலைமை இவ்வளவு இனி மையாக இல்லை. அவர்க ளது கண்டுபிடிப்புகள் மதநம் பிக்கைகளுக்கு விரோதமான தாகக் கருதப்பட்டால் கண்டு பிடிப்புகளை அவர்கள் வெளி யிட முடியாது. மீறி வெளியிட் டால், அவர்களது உயிருக்கே கூட ஆபத்து காத்திருந்தது. இப் படிப்பட்ட சிக்கலை இந்த உலகம் கண்ட மாபெரும் விஞ்ஞானி கலி லியோ கலிலி தன் வாழ்நாளில் சந்தித்தார். நவீன விஞ்ஞானத்தை உருவாக்கியதில் அவரது பங்கு மகத்தானது. வானவியல், இயற் பியல் மற்றும் கணிதவியலில் அவரது கண்டுபிடிப்புகள் ஒரு அறிவி யல் புரட்சியையே ஏற்படுத்தின. ஆனாலும் மதவாதிகளின் தண் டனையை அவர் எதிர்கொள்ளவேண்டி வந்தது.

17 வயதிலேயே...
கலிலியோ 1564-ஆம் ஆண்டு இத்தாலி நாட்டின் பைசா நகரத் தில் பிறந்தார். 17 வயது சிறுவனாக இருக்கும்போது ஒரு நாள் சர்ச்சில் தொங்கவிடப்பட்டிந்த ஒரு விளக்கு காற்றில் ஆடுவதைக் கவனித்தார். அதன் அலைவீச்சு (ளறiபே) சிறிதாக இருந்தாலும் பெரிதாக இருந்தாலும் அது ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குச் செல்ல ஒரே அளவு நேரத்தை எடுத்துக் கொள்வதாக அவருக் குத் தோன்றியது. அதை எப்படி சரிபார்ப்பது? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று தெரி யாமலா சொன்னார்கள்? தனது நாடித்துடிப்பை வைத்தே தனது ஊகம் சரிதான் என்று கண்டு பிடித்தார். இப்ப டித் தான் அவர் ஊசலின் (ளiஅயீடந யீநனேரடரஅ) விதிகளைக் கண்டுபிடித்தார்.
25 வயதில் பைசா பல் கலைக் கழகத்தில் அவர் கணித விரிவுரையாளராகச் சேர்ந்தார். பண்டிதர்களின் மொழியான லத் தீனில் போதிப்பதற்குப் பதில் பாமர மொழியான இத்தாலி மொழியில் கற்பித்தார். 2000 ஆண்டுகளாகக் கொடிகட்டிப் பறந்துவந்த அரிஸ்டாட்டிலின் சில கருத்துக்களை கலிலியோ கேள்வி கேட்கத் தொடங்கினார். உதாரணமாக, இரண்டு பொருட் களை ஒரே நேரத்தில் கீழே விட்டால் கனமான பொருள்தான் தரை யை முதலில் வந்தடையும் என்பது அரிஸ்டாட்டிலின் ‘தத்துவம்.’ இதைத் தவறு என ஒரு சிறு பரிசோதனை மூலம் கலிலியோ நிரூபித்தார் (இது பற்றி அறிவியல் கதிரில் முன்னரே எழுதியிருக் கிறேன்). தொலைநோக்கியைக் கண்டுபிடித்தவரும் கலிலியோ தான். ‘சந்திரன் மிருதுவான உருண்டை வடிவப் பந்து’ என்பது அரிஸ்டாட்டிலின் கூற்று. “சந்திரனின் மேற்பரப்பு கரடுமுரடானது, மலைகளும் பள்ளத் தாக்குகளும் நிறைந்தது” என்று தொலை நோக்கி மூலம் கண்ட றிந்து சொன்னார் கலிலியோ. முதன்முதலில் தொலைநோக்கி மூலம் பால்மண்டலத்திலுள்ள பல புதிய நட்சத் திரங்களைக் கண்டு ஆச்சரியப்பட்டவரும் அவரே ; மற்றவர்களை ஆச்சரியப்படுத்திய வரும் அவரே.
பிரபஞ்சத்தின் மையம் பூமியா, சூரியனா..?
“பிரபஞ்சத்தின் மையம் பூமியே-ஏனெனில் அது அவ்வாறு தான் ஆண்டவனால் படைக்கப்பட்டிருக்கிறது” என்பது அக்காலத் திய நம்பிக்கை. அரிஸ்டாட்டில் மட்டுமல்ல, தாலமி என்ற வானவி யலாளரும் அப்படித்தான் கூறியிருந்தார். “ பிரபஞ்சத்தின் மையம் பூமியல்ல. சூரியன்தான் மையம். சூரியனைச் சுற்றியே பூமியும் மற்ற கிரகங்களும் வருகின்றன. சூரியன் நகருவதாகத் தோன் றுவது பூமியின் வேகத்தினால்தான்” என்பது கோபர்னிக்கஸ் என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு. கலிலியோ கோபர்னிக் கஸின் கருத்துதான் சரி என்று நிரூபித்தார். ஆனால் கலிலியோ வின் இந்த `அதிகப் பிரசங்கித்தனங்களை’ சக விஞ்ஞானிகளே கூட ஏற்க மறுத்தனர்.
கோபர்னிக்கஸின் கருத்துக்களை ஆதரித்து கலிலியோ எழுதிய ‘னுயைடடிபரந’ என்ற புத்தகம் மிகப் பிரபலமா னது. பைபிளில் கூறப்பட்ட தற்கு மாறாக கலிலியோ வின் கருத்துக்கள் இருந் ததால் போப் முன் ஆஜ ராகி விசாரணையை அவர் எதிர் கொள்ள நேர்ந் தது. கலிலியோவுக்கு ஆயுள் தண்டனை விதிக் கப்பட்டது. பின்னர் அது வீட்டுச் சிறைவாசமாக மாற்றப்பட்டது. அவரது வயோதிக காலத்தில் ‘சர்ச்சைகளில் சிக்காத’ இயற்பியல் ஆராய்ச்சிகளில் ஈடுபட அவர் அனுமதிக்கப்பட்டார் ! 1638-இல் இரு கண்களும் தெரியாமல் போய்விட்டது. அந்த நிலைமையிலும் பெண்டுலத்தைப் பயன் படுத்தி கடிகாரத்தைக் கண்டுபிடித்தார் கலிலியோ. 1642-இல் இம்மண்ணுலகை விட்டு மறைந்தார். அவர் விட்ட இடத்திலிருந்து தொடங்கி மேலும் பல கண்டுபிடிப்புகளை உலகத்திற்குத் தந்தவர் சர் ஐசக் நியூட்டன்.
1992-இல்-கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து-கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்। அறிவியல் உண்மைகள் அவை வெளி யிடப்படும் காலத்தில் ஏற்கப்படாவிட்டாலும், என்றாவது ஒரு நாள் ஏற்கப்படும் என்பதற்கு கலிலியோவின் வாழ்க்கை ஓர் உதாரணம்

-- நன்றி-- பேரா. கே.ராஜு

Wednesday 11 July, 2007

உயிரனக் கலைக்களஞ்சியம்


உயிரனக் கலைக்களஞ்சியம்
ஆங்கில வழி பயிற்றுவிப்பு பள்ளியில் படிக்கும்போது என்சைக்ளோபீடீயா என்ற சொல்லை ஆசிரியர் சொல்லி முதலில் கேட்டபோது, என்னடா இது தமிழ் வார்த்தைகளை சொல்கிறார் என்றுதான் முதலில் எங்களுக்கு தோன்றியது. எங்களுக்கு என்றால் எனோடு சேர்ந்த மற்ற சக மாணவர்களும். பொதுவாகவே என்சைக்ளோபீடியாவை கிண்டலாக என் சைக்கிளை பிடியா என்று நாம் சொல்லக் கேட்டிருப்போம். லத்தீன் மொழியில் என்சைக்ளோபீடியா என்றால் பொதுக் கல்வி என்று பொருள். ஆனால் இது என்குக்லியோஸ், பேய்டியா என்ற இரு கிரேக்க வார்த்தைகளிலிருந்து லத்தீனுக்கு வந்தது. கிரேக்க மொழியின்படி அந்த இரு வார்த்தைகளுக்கான பொருள் முழுமையான, பொதுவான கல்வி என்பதாகும்.
தமிழில் கலைக்களஞ்சியம் என்று கூறப்படும் இந்த என்சைக்ளோபீடியா, பல்வேறு தலைப்புகளிலான, பல்வேறு விடயங்களை பற்றிய தகவல் திறட்டாக, அறிவுக்களஞ்சியமாக விளங்குகிறது.
ஆக முழுமையான தகவல் திரட்டாக அமையும் இந்தக் கலைக்களஞ்சியம் ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழக மற்றும் பள்ளி மாணவர்களுக்கு உதவியாக அமைகின்றது. சொல்லகராதியில் சில சமயங்களில் நமக்கு புரியாத வார்த்தைகளை தேடி கண்டுபிடித்து விடமுடியும் என்பது உண்மைதான். ஆனால் அந்தச் சொல்லை பற்றிய கூடுதலான தகவல் அறிய விரும்பினால் நமக்கு உதவியாக வருவதுதான் கலைக்களஞ்சியம்.
மனித அறிவுக்கு புலப்பட்ட எல்லா விடயங்களையும் நாம் இந்த கலைக்களஞ்சியங்களில் காணமுடியும் என்று சொன்னால் அது உண்மையே. ஏன் மனித அறிவுக்கு இன்னும் புலப்படாத விடயங்களைக் கூட நாம் காணலாம். எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால், உலகின் பல்வேறு தகவல்களைக் கொண்ட திரட்டாக, அறிவுச் சுரங்கமாக உள்ள கலைக்களஞ்சியம் இருக்கிறது என்றாலும், புதிதாக ஒரு கலைக்களஞ்சியத்தை உலகின் மூத்த அறிவியலாளர்கள் உருவாக்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த கலைக்களஞ்சியம் உருவாக்கப்பட்டபின் 300 மில்லியன் பக்கங்கள் அதாவது 30 கோடி பக்கங்கள் கொண்ட மாபெரும் புத்தகமாக இது இருக்கக்கூடும் என்கிறார்கள். அதாவது பக்கங்களை கீழே தரையில் வைத்து அடுத்து அடுத்து ஒரே வரிசையாக வைத்தால் ஏறக்குறையா 52 ஆயிரம் மைல் நீளும். நமது பூமியின் பூமத்தியரேகை அல்லது நிலநடுக்கோட்டில் இந்த வரிசைபடுத்தலைச் செய்தால் இரண்டு முறை உலகைச் சுற்றிவரலாம். ஏய் ஆத்தி என்று மூக்கில் விரல் வைத்து, இவ்வளவு பெரிய புத்தகத்தை எப்படி அச்சடிக்க போகிறார்கள், அதை யார் வாங்குவது, அதன் விலை எவ்வளவாக இருக்கும் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். காரணம், இது புத்தகமாக அச்சடிக்கபடப் போவதில்லை. இந்தக் கலைக்களஞ்சியம் இணையதளமாக, உலகின் அனைத்து மக்களுக்கும் பார்க்கக்கூடிய ஒன்றாக அமைக்கப்படவுள்ளது. ஆனாலும் இந்தக் கலைக்களஞ்சியத்தை பற்றிய முக்கியமான, ருசிகரமான தகவலை உங்களுக்கு இன்னும் நான் கூறவில்லை. இநதக் கலைக்களஞ்சியம், பூமியின் உயிரினங்களை பற்றிஅயதாக மட்டுமே அமையும் என்பதுதான் அந்த முக்கிய தகவல். அதாவது மனிதனுக்கு இதுவரை தெரிந்த 18 லட்சம் உயிரன வகைகள் பற்றிய அனைத்துத் தகவலும் இந்த கலைக்களஞ்சியத்தில் இடம்பெறும்.
உயிர் கலைக்களஞ்சியம் என்ற இந்தத்திட்டப்பணியின் முதல் இரண்டரை ஆண்டுப்பணிகளுக்கு மட்டுமே 12.5 மில்லியன் அமெரிக்க டால்ர் தொகையை மெக்கார்த்தர் & ஸ்லோன் அமைப்பு அளித்துள்ளதாம். இந்தக் கலைக்களஞ்சியத்தை தொகுத்து முடிக்க 10 ஆண்டுகள் தேவை என்று கூறப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட உயிரனத்தின் புகைப்படம், ஓளி மற்றும் ஓலிப்பதிவுகள், அவை வாழும் பகுதிகள் பற்றிய வரைபடம், அவற்றின் மரபணுத்தொகுதி பற்றிய தகவல், அந்த உயிரனம் தொடர்பான அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எல்லாமே இடம்பெறும். இந்த மாபெரும் அறிவியல் தகவல் திரட்டு மற்றும் தொகுப்புப்பணியில் உலகின் முன்னணி அறிவியலாளர்கள், அருங்காட்சியகங்கள், பல்கலைக்கழகங்கள், ஆய்வுக்கூடங்கள் என பலரது பங்கேற்பு இடம்பெறும்.
இந்த இணையதளம் ஒரு ஊடாடும் விலங்கியல் பூங்காவாக அமையும் என்கிறார் இந்தத் திட்டப்பணியின் செயல் தலைவராக பொறுப்பேற்கும் எட்வர்ட்ஸ் என்பவர். அதாவது நேரடியாக நாம் விலங்கியல் பூங்காவுக்குச் சென்றால் தேவைப்படும் இடத்தில் நின்று பார்த்து, நாமாக தெரிவு செய்து அடுத்த பகுதிகுச் சென்று பார்த்து அறிவது போல், இந்த இணையதளத்திலும் தகவல்களை பெறலாம்.
இது உலகளாவிய மாபெரும் முயற்சி என்பதோடு, அறிவியல் துறையில் ஒரு பெரும் எம்பிக் குதிப்பு போன்ற முயற்சியாகும் என்கிறார் அமெரிக்காவின் வாஷிங்கடனில் உள்ள புகழ்பெற்ற ஸ்மித்சோனியன் நிறுவனத்தைச் சேர்ந்த கிரிஸ்டியன் சாம்பர். கடந்த ஒரு தசாப்த காலமாக புவியிலுள்ள மனிதனுக்கு புலப்பட்ட அனைத்து உயிரின வகைகளையும் கொண்ட ஒரு பட்டியலை உருவாக்க அறிவியலாளர்கள் முயன்று வருகின்றனர். ஆனால் இது பாரமான பணி, அதிக நிதி தேவைப்படும் முயற்சி, சிக்கலானதும் கூட என்பதால், இதுவரையிலும் இந்த பட்டியலோ அல்லது தகவல் திரட்டோ வெற்றிகரமாக உருவாக்க முடியவில்லை. ஆனால் தற்போது உலகின் அறிவியலாளர்களும், முன்னணி பல்கலைக்கழகங்களும், ஆய்வுக்கூடங்களும் கைகோர்த்து உயிரினங்களின் தகவல் திரட்டை, கலைக்களஞ்சியமாக உருவாக்க மேற்கொள்ளும் முயற்சி நிச்சயம் வெற்றிபெறும் என்று நாம் நம்பலாம்.

Saturday 7 July, 2007

எங்கய்யா போச்சு பூமியின் மேலடுக்கு பகுதி


எங்கய்யா போச்சு பூமியின் மேலடுக்கு பகுதி
மனிதர்கள் கழிவுகளாக வெளியேற்றும் பொருட்களும், நகரவாசிகள் அறிந்தும் அறியாமலும் குளியலறைகளில் தவறவிடும் பொருட்களும் சென்று சேரும் இடம் பொதுவாக கடல்தான்।
கடலுக்குள் இயற்கை நமக்களித்த எத்தனையோ செல்வங்கள் தவிர, கடற்கரைக்கு காற்று வாங்க வந்து வழியில் வாங்கிய இனிப்பு காரம், பட்டாணி சுண்டல் எல்லாம் பொதிசெய்திருந்த காகிதங்களும், பிளாஸ்டிக் உறைகளும், விளையாட்டாய் வீசியெறியும் பொருட்களும், தவறவிடும் காலணிகளும் என பலவற்றைக் காணலாம்। கடல் நீரின் ஆழத்தில் சென்றால் இன்னும் பல பொருட்களை கண்டெடுக்கலாம்। கடலுக்குள் சென்று ஆராய்ந்து பார்த்தாலும், கடற்கரையோரத்தில் நடந்து சென்றாலும் இயற்கையும் செயற்கையுமாக அலைகழித்து விடப்பட்ட பல பொருட்களைக் காணமுடியும் என்பது மீனவர்களுக்கும், கடலோரக் காற்றுக்கு மனதை தொலைத்த ஆயிரக்கணக்கான மக்களுக்கும் தெரியும்.
ஆக கடலுக்குள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும் பல விடயங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
அரபிக்கடலோ, செங்கடலோ, இந்து மாக்கடலோ பெயர்களால் வேறு பட்டாலும் இந்த கடல் என்ற நீர்தான் பூமிப்பந்தின் பெரும்பான்மையை பிடித்துள்ளது.
சிறுவயதிலிருந்தே நமக்குச் சந்தேகங்கள் அதிகம் எழுவதுண்டு. கேள்வி கேட்டு ஒன்றேல் ஆசிரியருக்கு அப்போது பதில் தெரியாததால் நமக்கு அடி, அல்லது கேட்கப்படும் கேள்வி வகுப்பை குழப்படிக்கவே செய்யப்படுகிறதோ என்று ஆசிரியர நமது பகுத்தறிவு வேட்கையின் மீதான சந்தேகத்திலும், குறும்புக்கார பையன் அவன் என்று சொன்ன சக ஆசிரியரின் குரல் தனக்கு நினைவில் வந்த காரணத்திலும் நமக்கு அடி. ஆக இப்படி அடி வாங்கியும் வாங்காமலும் சந்தேகம் தீராமல் கிடந்த கேள்விகளில் ஒன்றை உங்களுக்கு சொல்கிறேன். பூமியின் பெரும்பாலான பகுதி நீர் என்று சொல்கிறார்கள், நீருக்கு அடியில், ஆழத்தில் நிலம்தானே பிறகு எப்படி பெரும்பகுதி நீர் என்று சொல்லலாம்? உம்மை அடிச்சதில் தப்பேயில்லை என்று உங்களுக்குல் சிலர் கூறுவது எனக்கு புரிகிறது.

பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சில அறிவியலாளர்கள் அட்லாண்டிக் கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நோக்கி பயணம் மேற்கொண்டுள்ளனர். மீன் பிடிக்கவோ, அல்லது கடல் வாழ் உயிரினங்களை பற்றி ஆய்வு செய்யவோ இவர்கள் இந்தப் பயணம் மேற்கொள்ளவில்லை. காணாமல் போன ஒன்றைத் தேடித்தான் அவர்கள் சென்றுள்ளனர். டைட்டானிக் கப்பல் போல கடலுக்கடியில் மூழ்கியிருக்கும் ஏதோ ஒரு கப்பலை தேடி சென்றுள்ளார்களோ என்று யோசிக்க வேண்டாம். அவர்கள் தேடுவது என்னவென்று கேட்டால் சிரிப்புதான் வரும். காணாமல் போன பூமியின் மேலடுக்கு பகுதியைத் தேடி, என்ன ஆனது என்பதை அறியத்தான் அவர்களது இந்தப் பயணம். அட்லாண்டிக் கடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பூமியின் மேலடுக்குப் பகுதி காணவில்லை, மேலடுக்கு பகுதி இல்லாமல் பூமியின் அடியில் உள்ள மேன்டில் எனப்படும் கவசப்பகுதியே காணப்படுகிறது. புரியும் படி சொன்னால் நமக்கு காயமேற்படும்போது, நமது உடலில் உள்ள மேல் தோல் நீங்கி உள்ளே இருக்கும் அடித்தோல் அல்லது எலும்புகளை பார்க்க முடிகிறது அல்லவா அதைப்போலத்தான். ஆக இந்த அட்லாண்டிக் கடலின் குறிப்பிட்ட பகுதியில் பூமிக்கு காயமேற்பட்டு உள்ளே சில ஆயிரம் மீட்டர் அடியில் உள்ள மேன்டில் எனும் கவசப்பகுதி தென்படுகிறது.
பூமியில் இப்படியான ஒரு காயம் பற்றி அறியப்பட்ட கடந்த 5 அல்லது 6 ஆண்டு காலத்தில், அறிவியலர்களுக்கு ஆச்சரியமும், குழப்பமும் தொடர்கிறது. இந்த காணமல் போன மேலடுக்கு பகுதி அல்லது பூமியிலான காயம், பல்லாண்டுகளாய் நீடித்து வரும் பூமியின் நிலத்தட்டுகள் அல்லது புவித்தளத்தட்டுகளின் உருவாக்கம் பற்றிய புரிதல்களை, தேற்றங்களை சவால் விடுக்கும்படியாக, பொய்யாக்கும்படியாக அமைவதே அறிவியலர்களின் குழப்பங்களுக்கு காரணம்.
சுனாமி, ஆழிப்பேரலை ஏற்பட்ட பிறகு நம்மில் பலருக்கு இந்த புவித்தளத்தட்டுகள் பற்றி பரவலாக தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம்.

பூமியை ஆப்பிள் போல குறுக்காக வெட்டி பார்த்தால் நான்கு படிவங்களாக அல்லது அடுக்குகளாக பூமி அமைந்திருப்பதைக் காணலாம். பூமிக்கு அடியின் மையமாக உள்ள உட்கரு, சுமார் 1200 கி மீ விட்டம் கொண்டது. அதற்கு மேலே வெளிக்கரு அடுக்கு இது திரவ நிலையில் காணப்படுகிறது. அதற்கு மேல்தான் இந்த வெப்பமான திரவத்தை காக்கும் கவசப்பகுதி, அதற்கு மேல் புவியின் மேலடுக்கு. புவியின் உட்கருவின் வெப்பநிலை சூரியனின் மேற்பகுதியை விட வெப்பமானது. இந்த உட்சூட்டினால் மேற்கரு மற்றும் கவசப்பகுதியிலான பொருட்கள் அசைகின்றன, நகர்கின்றன. புவிக்கடியிலான பொருட்களின் அசைவால், நகர்வால் மேலடுக்கு மற்றும் கவசப்பகுதிகள் அடங்கிய புவித்தளத்தட்டுகள் புவியின் மேற்பரப்பு நோக்கி நகர்கின்றன. இந்த புவித்தளத்தட்டுகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது அதன் விளைவாக, நிலநடுக்கம், சுனாமி என இயற்கையின் சீற்றத்தை நாம் காணலாம்.
ஆக பூமி அல்லது புவியின் செயல்பாடு, அதன் தன்மை பற்றி இப்போது அறிவியலர்களுக்கு ஏற்கனவே இருந்த புரிதல்களும் புரியாமல் போக, பகுத்து அறியும் மனிதகுலத்தின் வேட்கையின் விளைவாக அறிவியலர்கள் தொடர்ந்து ஆய்வுகளில் இறங்கியுள்ளனர். இந்த குறிப்பிட்ட அட்லாண்டிக் கடலடிப்பகுதியில் காயமடைந்து காணப்படும் புவிப்பரப்பையும், காயத்தால் கண்களுக்கு தெரியும் பொதுவாக சில ஆயிரம் மீட்டர்களுக்கு அடியில் உள்ள கவசப்பகுதியையும் கள ஆய்வு செய்ய 20 பேர் கொண்ட பிரிட்டன் நாட்டு அறிவியலர்கள் குழு பயணம் மேற்கொண்டுள்ளது.
முன்னர் குறிப்பிட்ட இந்த புவித்தளத்தட்டுகளின் மோதுதலின் விளைவாக இப்படி இந்த காயமேற்பட்டு, புவி மேலடுக்கு காணாமல் போனதா? அல்லது இந்தப்பகுதியில் புவி மேலடுக்கு பகுதி தோன்றவே இல்லையா?
இந்த கேள்விகள் ஒரு புறம் என்றால், தற்போதைய ஆய்வுகளுக்கு அறிவியலர்களை உந்தித்தள்ளியது, இனியும் புவி எப்படியெல்லாம் பரிணமிக்க போகிறது என்பதை ஆறியும் ஆவலாகும். பல சதுர கீலோமீட்டர்கள் பரந்துள்ள இந்த புவியின் மேலடுக்கு இல்லாத, பூமியின் காயம் என அழைக்கப்படும் பகுதி குறித்து பிரிட்டன் சவுதேம்ப்டன் தேசிய கடலாய்வு மைத்தின் மூத்த ஆய்வாளரும் அறிவியலருமான பிராம்லி மர்ட்டன் குறிப்பிடும் போது, கடலுக்கடியிலான பூமிபரப்பில் இன்னும் பல மில்லியன் சதுர கிலோமீட்டர் கடலடிப்பகுதி காணாமல் போயிருக்கலாம் என்பதை தற்போது அறிவியலர்கள் உணரத் தொடங்கியுள்ளதாக கூறுகிறார்.
சரி இப்படி புவியின் மேலடுக்கு பகுதி இல்லாமல் புவிக்கடி அடுக்குகள் சிரிக்க கிடக்கிறதே இதனால் ஏதும் ஆபத்தில்லையா என்றால். இது இயற்கையாக நிகழ்ந்தது, இயற்கையின் பரிணமிப்பில் ஒரு பகுதியாத்தான் இது அமைந்துள்ளது. ஆனால் இந்த அகன்ற புவியின் தன்மை மற்றும் எப்படி இந்த உலகம் என்ற பூமிப்பந்து இப்படியாக ஒர் தோற்றம் பெற்றது என்பதையெல்லாம் ஆய்ந்தறிவது அவசியமானது. இன்னும் எத்தனை அதிசயங்கள் இயற்கையில் புதைந்துள்ளதோ, யாருக்கு தெரியும்.

Friday 6 July, 2007

எரியும் பனிக்கட்டி



எரியும் பனிக்கட்டி

காலநிலை மாற்றம், பு வெப்பமேறல், பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் இவையெல்லாம் நம்மிடையே பரவலாக அறிந்த விடயங்களாகிவிட்டன. பசும்பொருட்கள், பசுந்தயாரிப்புகள் என சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பொருட்களை, மின் கருவிகளை பயன்படுத்தும் அளவுக்கு பல நாடுகளில் இந்த புவி வெப்பமேறல் பிரச்சனைபற்றியவிழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.
மறுபுறத்தில் எரியாற்றலாக பயன்படும் எண்ணெய் வளத்துக்காக இன்றும் கூட மோதல்கள். ஒரு காலத்தில் ஒரு லிட்டர் 10 ரூபாய், 15 ரூபாய் விற்ற பெட்ரோல், டீசல் இன்றைக்கு நம்மை பெருமூச்சு விடச்செய்கின்றன. எரிபொருட்களின் விலையேறினால் மற்ற பொருட்களும்தான் விலையேற்றம் பெறும். என்ன செய்ய? இது இப்படியிருக்க, அந்த எரிபொருளே கூட இன்னும் சில தசாப்தங்களில் "சட்டியில் இருந்தால்தானே அகப்பையில்" என்றாகும் நிலை. ஆக உலகமே இப்போது மாற்று எரிபொருளை, மாற்று எரியாற்றலை தேடிக்கொண்டிருக்கிறது.
காற்று, ஆதவனின் கதிர், நிலத்தடி வெப்பம் என மாற்று எரியாற்றலை பல வழிகளில் தேடிய மனிதன், கடலுக்கடியில் எண்ணெய் வளத்தைத் தவிர வேறு ஒன்றையும் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்தான்.
நீரும், இயற்கைவாயுவும் ஒன்றாகக் கலந்த திட வடிவிலான ஒரு வகை கலவை, பனிக்கட்டி போன்ற படிகத்தன்மையுடன் கூடிய ஒரு பொருளை கடலடியில் கண்டறிந்தனர் ஆய்வாளர்கள்.
1 2 3

Thursday 5 July, 2007

15வதுதேசிய குழந்தைகள் அறிவியல்




படம் 1 மாநிலஅளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு காட்சி
படம் 2மாவட்டஅளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டு காட்சி
படம் 3தேசிய அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாட்டு காட்சி
குழந்தைகள் அறிவியல் மாநாடு
கடந்த 14 ஆண்டுகளாக தேசிய அறிவியல்தொழில் நுட்பக் கழகத்தின் உதவியுடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் குழந்தைகள் அறிவியல் மாநாட்டை நடத்திவருகின்றது,
குழந்தைகளிடையே அறிவியல் ஆய்வு மனப்பான்மையை வளர்க்க இந்த மாநாடு நடத்த படுகினற்து,
பள்ளி செல்லும் அல்லது செல்லாத குழந்தைகள் குறைந்தது மூவர்,அதிக பட்சம் ஐவர் அடங்கிய குழுவாக ஆய்வுகள் மேற்கொள்வார்கள்,ஆய்விற்கான தலைப்பு அளிக்கப் படும்,
மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப் பட்ட ஆய்வுகள் மையமான ஓர் இடத்தில் குழு குழந்தைகள் மூலம் வாசிக்கப் பட்டு,அளிக்கப் பட்ட தலைப் போடு பொருந்தக்கூடிய, புதிய தகவலை/விவரத்தை அளிக்க கூடிய, அறிவியல்பூர்வ தீர்வை முன் வைக்க கூடிய ஆய்வுகள் வல்லமை பெற்ற நடுவர்களை கொண்டு தேர்வு செய்யப் பட்டு அம்மாணவர் குழு மாநில மாநாட்டிற்கு அனுப்பபடும் அங்கு தேர்வு செய்யப்படும் ஆய்வு அறிக்கைகளை தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட் டில் கவுரவிக்கப் படும்।

மாவட்டளவில் பங்கேற்கும் மாணவர்கள் அனைருவமே "குழந்தை விஞ்ஞானிகள் " என்று சான்றிதழ் அளிக்கப் பெறுவர்.11 முதல் 13 வயது வரை ஒரு குழுவாகவும், 14 வயது முதல் 17 வரை ஒரு குழுவாகவும் செயல்பட அனுமதிக்கபடுவர்.
சென்ற வருடம் மாநில மாநாடு ஈரோட்டிலும், தேசிய மாநாடு சிக்கிமிலும் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தலைமையில் நடைப்பெற்றது.
சென்னை மாவட்ட மாநாடு சென்னை பல்கலை கழக வளாகத்தில் துணை வேந்தரின் தொடக்கவுரையுடன் நடைப்பெற்றது.
ஒவ்வொரு வருடமும் மாணவர் குழுக்களுக்கு உறுதுணையாக செயல்பட கூடிய வழி காட்டி ஆசிரியர்களுக்கு பேராசிரியர் மற்றும் வல்லுனரின் உதவியுடன் பயிற்சிகள் நடத்த படும்.
இந்த வருடம் மேற்க்கொள்ள வேண்டிய ஆய்வின் தலைப்பு-"உயிரிகளின் பல் வகைமைஎதிகாலத்திற்கு உயிர்களை பாதுகாத்தல்"....
14ஆண்டுகளில் கலந்து கொண்ட பல் மாணவர்கள் இன்று அறிவியல் துறையில் சிறந்து விளங்கு கின்றனர்....
உங்கள் பிள்ளைகள் மற்றும் தெரி ந்த பிளளைகளை பங்கேற்க்க செயலாமே...
விவரங்கள் அறிய..
உதயன் (சென்னை மாவட்ட செயலர்)
9444453588
அ।செம்மல் ( வட சென்னை மாவட்ட ஒருங்கினைப்பாளர்)
9841764170
சுதாகர் (மண்டல ஒருங்கினைப்பாளர் }
9840989822
கனேஷ் (தே।கு।அ।மா மாவட்ட ஒருங்கினைப்பாளர்}
9940424642
அலி பாட்ஷ (தே।கு।அ।மா மாவட்ட அமைப்பாளர்)
9840851718









Tuesday 3 July, 2007

ஐ.டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவை யா?

ஐ।டி யில் பணி புரிகிறவர்களுக்கு யூனியன் தேவையா?

இப்படி ஒரு கேள்வி ஐ. டி நிறுவண நிர்வாகிகளிடம் இருந்து குறிப்பாக இன்போசிஸ் நிர்வாகிகளிடம் இருந்து வந்த வன்னம் உள்ளது, தொழிற்சங்கம் என்பது பல தியாகங்களை செய்து பெறப்பட்ட உரிமை, ஒருவரோ அல்லது அதிகமானாவரோ இந்த உரிமை குறிப்பிட்ட ஒரு தொழிலுக்கு பொருந்தும் அல்லது பொருந்தாது என்று கூறுவதற்கில்லை.அப்படி இருக்க இவர்கள் ஐ.டி தொழிலிள் யூனியன் என்றதும் ஏன் பதறு கிறார்கள்?காரணம் இல்லாமலில்லை,இந்தியாவில் முகாமிட்டுள்ள பல்வேறு ஐ.டி கம்பேணிகள் எவவளவு நாள் நிலைத்திருக்கும் என்பது கேள்விக்குறியே..
கம்பெணியின் நிலை தன்மையே கேள்விக்குறி எனும் போது தொழிலாளர் நிலை...
கம்பெணி மூட்டை கட்டும் போது தொழிலாளர்கள் வாழ்க்கையை பற்றி கேள்வி யெழுப்பி விட்டால் ....
அதுவும், யூனியன் என்ற பேரில் கூட்டமாக சேர்ந்து கேள்வி யெழுப்பி விட்டால்.....இப்படி பல் கேள்விகளை அவர்களுக்குள் எழுப்பி பார்த்து தான் யூனியனா வேண்டவே வேண்டாம் என்று பதறு கின்றனர்,யூனியனாக கட்டமைய விட்டாமல் சித்து வேளையெல்லாம் செய்கிறார்கள்.
கை நிறைய சம்பளம், போக்குவரத்துக்கு வசதி. சோர்வை கலைத்து உற்சாகம் கூட்ட காபி,டீ,மென்பாணம் (இன்னும் சில இடத்தில் பீர்) அத்தோடு நில்லாமல் வாரம் ஒரு முறையோ மாதம் ஒரு முறை யோ உல்லாச சுற்றுலா என "இவை யெல்லாம் எத்தனை நாளைக்கு " என்று மனதில் கேள்வி யெழும் வாய்ப்பே இல்லாமல் பார்த்துக் கொள்ள முயல்கிறார்கள்.
ஆயுத பூஜைக்கு முதலாளியா பார்த்து கவரில் போட்டு தரும் இணாமுக்கும்,உரிமையுடன் பேசி பெரும் போன்ஸ் பணத்துக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.
இனாம் என்ற நினைவுடனே ஐ.டி நிர்வாகம் அளிப்பவற்றை ஊழியர்கள் பெற வேண்டும்,அது அவர்களின் உரிமை யென்றபுரிதல்லெல்லாம் வந்து விட கூடாது.யூனியன் அவர்களின் உரிமைகளை புரிய வைத்துவிடும் எனவே தான் எதிர்க்கிறார்கள்.
யூனியன் அவசியம் ஊழியருக்கு புரிய வேண்டும்.. நல்ல யூனியன் தலைமையை அவர்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.

சிந்திப்போம் நண்பர்களே...: கருத்து கணிப்பா? திணிப்பா?

சிந்திப்போம் நண்பர்களே...: கருத்து கணிப்பா? திணிப்பா?

கருத்து கணிப்பா? திணிப்பா?

கருத்து கணிப்பு என்ப்து அறிவியல் பூர்வமாக கூறப்படும் பொய் என்று யாரொ சொல்ல கேட்டது தினகரன் வெளியிட்ட சர்வே முடிவு களை பார்க்கும் போது நினைவிற்க்கு வந்தது,அந்த பத்திரிகை முதலாளிகளுக்கு உள்ள விருப்பத்தை கருத்து கனிப்பு என்ற பேரில் மக்கள் மூலையில் தினிக்க முயன்றுள்ளது தெள்ள தெளிவாக புரியும்.ஆரம்ப காலத்தில், அரசின் செயல் பாடு குறித்து மக்களின் கருத்தறிய இத்தகைய சர்வேக்கள் உதவியது. தற்போதும் கூட பல்வேறு வனிக நிறுவணங்கள் தங்களின் சந்தை நிலவரத்தை அறிய இத்தகைய சரிவேக்களை நிகழ்த்து கின்றன,அதன் மூலம் தங்களின் தொழில் முன்னேற்றத்தைதிட்ட மிடுகின்றன.மேலும் பல்வேறு தன்னர்வ அமைப்புகளும்,மாணவர் குழுக்களும் சர்வேக்கள் நடத்தி சமூக பிரச்சனைகளை வெளிகொணற உதவு கின்றனர்.ஆனால் இழவு வீட்டில் கூட அரசியல் லாபம் தேடும் கேடு கெட்ட அரசியல் வாதிகள் இந்த சர்வே முறையை கூட தங்களின் சுய தம்பட்டத்திற்க்கு பயன் படுத்தி கொள்கின்றனர்.தினகரன் தனது சர்வேவை ஒரு பிரபல மான சர்வே நிருவணத்தின் மூலம் நடத்தி யுள்ளது, இந்நிறுவணம் போன்றே பல நிறுவணங்கள் சர்வதேச அளவில் பேரும் தரமும் கொண்டிருந்தாலும் உள்ளூர் அளவில் அப்படி இல்லையெண்றே தோண்றுகிறது, ஏனென்றால் அவை மேற்கோள்ளும் சர்வெக்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர் விருப்பத்தை , எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமான முடிவை கொண்ட தாக இருக்க நிர்பந்திக்க படுகிறார்கள், மேலும் இந்த நிறுவணங்கள்கள ஆய்விற்கு அனுப்பும் பணியாளர்கள் அக் கம்பெனியின் நிரந்தர பணியாளராக இருப்பத்தில்லை,ஊதியத்தை பொறுத்தவரை எந்த ஒரு நிர்ணயிப்பும் இல்லை,அந்த ஊதியமும் குறிப்பிட்ட கால கெடுவில் வழங்க படுவதில்லை,எனவே களப்பணியளர்களில் பலர் ஒரே நேரத்தில் பல நிறுவணத்தில் பணி புரியும் நிலையும் உள்ளது,இந் நிலையில் இப்பணியாளரிடம் இருந்து எப்படி தரமான விவரங்களை எதிர் பார்க்க முடியும்.இந்த லட்சணத்தில் மேற்க்கோள்ளப்பட்ட சர்வெ முடிவின் காரண மாக எத்தணை கொண்டாடம், ஆர்பாட்டம் ஒரு பக்கம் ,கோவாவேசம்,படுகொலைகள் மறு பக்கம்.
புகைந்து கொண்டுறிந்த தொழில் தகறாரை ,பங்காளி சண்டையை பட்டவர்த்தன மாக்கியது ஒரு சர்வே முடிவு. ....இந்த ஒரு விசயத்தை தவிர தினகரன் சர்வே வினால் யாதொண்றும் பயணில்லை நண்பர்களே...
சிந்திப்போம் நண்பர்களே...
சுய விளம்பரம்,பண பலம்,பிரசார ஊடகம்,சாதி,சந்தர்ப்ப வாத அரசியல் இன்றி, மக்கள் நலனுக்காக் உழைக்கும் அரசியல் சக்திகள் இருக்கின்றார்கள்,
அவர்கள் யாரெண்று கண்டறியும் திசை வழியில். .
சிந்திப்போம் நண்பர்களே...

Monday 2 July, 2007

சென்னை வந்தது நிமிட்ஸ்: கடும் எதிர்ப்பு



பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் அமெரிக்க போர்க்கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் அது நிறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரும் அணு சக்தியால் இயங்கும் போர்க் கப்பல்களில் ஒன்று யுஎஸ்எஸ் நிமிட்ஸ். ஓல்ட் சால்ட் என்ற செல்லப் பெயர் கொண்ட இந்தக் கப்பல் ஈராக் போரில் பெரும் பங்கு வகித்தது.
இந்தக் கப்பலை தளமாக பயன்படுத்தித்தான் ஈராக் மக்கள் மீது அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கி அழித்தன. இக் கப்பலில் இரண்டு அணு உலைகள் உள்ளன. இக்கப்பல் பல்வேறு நாடுளுக்கு சுற்றுலாவாக சென்று வருகிறது. அந்த வகையில் சென்னைக்கும் இக்கப்பல் வந்துள்ளது. ஆனால் அணு சக்தியுடன் கூடிய இந்தக் கப்பல் சென்னைக்கு வந்தால் சென்னை நகருக்கும், தென் மாநிலங்களுக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இதை மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி நிராகரித்தார். இக்கப்பலால் அணு கதிர்வீச்சு அபாயம் ஏதும் இல்லை என்று அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் 6000 போர் வீரர்கள் மற்றும் ஊழியர்களுடன் நிமிட்ஸ் இன்று காலை சென்னைக்கு வந்து சேர்ந்தது. சென்னை துறைமுகத்திலிருந்து மூன்றரை கடல் மைல் தொலைவில் இக்கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து ஊழியர்களை, இன்னொரு அமெரிக்க கப்பல் ஏற்றிக் கொண்டு சென்னை துறைமுகத்திற்குக் கொண்டு வரும். பின்னர் வருகிற 5ம் தேதி வரை சென்னையில் அவர்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள். சென்னை துறைமுகத்திலிருந்து நேராக அவர்கள் எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அங்கிருந்தது பல்வேறு பிரிவுகளாக பேருந்துகள் மூலம் சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு செல்கிறார்கள். இதற்கிடையே, நிமிட்ஸ் கப்பலால் ஆபத்து ஏதும் உள்ளதா என்பதைக் கண்காணிக்கவும், இந்திய கடலியல் பகுதியை பாதுகாக்கும் நோக்கத்துடனும், இந்திய கடற்படைக்குச் சொந்தமான ஒரு போர்க் கப்பல் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் நிமிட்ஸ் கப்பலைக் கண்காணித்தபடி இருக்கும். இதில், அணு சக்தித் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அடங்கிய குழு தங்கியுள்ளது. நிமிட்ஸ் வருகையை எதிர்த்து இன்று சென்னை துறைமுகம் எதிரே இடது சாரிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளன. எந்த ஆபத்தும் இல்லை-நிமிட்ஸ் கேப்டன் இதற்கிடையே நேற்று பத்திரிக்கையாளர்கள் நிமிட்ஸ் கப்பலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இலங்கை கடல் எல்லையில் நின்று கொண்டிருந்த நிமிட்ஸ் கப்பலுக்கு சிறிய கப்பல் மூலம் பத்திரிக்கையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் கப்பலின் கேப்டன் மைக்கேல் மெனசீர், கமாண்டர் ஜான் டெரன்ஸ் பிளாக், ஆகியோர் பேசினர். அவர்களிடம் கப்பலில் அணு ஆயுதங்கள் உள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்தக் கப்பல் மிகுந்த பாதுகாப்புடன் கூடியது. 57 ஆண்டுகளாக இது பயன்பாட்டில் உள்ளது. இதுவரை எந்த அசம்பாவிதமும் ஏற்பட்டதில்லை. இதனால் உங்களுக்கு (இந்தியாவுக்கு) எந்தவித ஆபத்தும் கிடையாது என்று உறுதியளிக்கிறோம் என்றனர். அணு ஆயுதங்கள் உள்ளதா என்று மீண்டும் செய்தியாளர்கள் கேட்டபோது, சில விஷயங்களை அவ்வளவு எளிதில் சொல்லி விட முடியாது என்று மழுப்பலாக அவர்கள் பதிலளித்தனர்.